வடலூர் சத்திய தர்மச்சாலையில் 126 ஆவது மாத தொடர் அன்னதான திரு தொண்டு.

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • வடலூர் சத்திய தர்மச்சாலையில் 126 ஆவது மாத தொடர் அன்னதான திரு தொண்டு.

04.11.2023 – வடலூர் சத்திய தர்மச்சாலையில் 126 ஆவது மாத தொடர் அன்னதான திரு தொண்டு.

நாள் : 04.11.23 
ஒவ்வொரு மாத பூச நாளில் வடலூர் சத்ய ஞானசபையில் ஜோதி தரிசனம் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்கு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சேவடிகள், நாகை சன்மார்க்க சங்கத்தவர் உடன் இணைந்து கடந்த 126 மாதங்களாக, தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பாரதி ஐயா அவர்கள் தலைமையில் திருத்தொண்டர்களுடன், மக்கள் பசி போக்க, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த சத்ய தருமச்சாலை அடுப்பில் நாள் முழுவதும், காய் கறி வெட்டுதல், சமையல் செய்தல், பாத்திரம் துலக்குதல், உணவு பரிமாறுதல் போன்ற ஜீவ காருண்ய பணிகள் இறையருளால் செய்து வருகிறார்கள். தீபம் அறக்கட்டளையின் சார்பாக மாதந்தோறும் 30 கிலோ கொண்டை கடலையும், வாழை இலை உபயமும் செய்யப்படுகிறது.

சீட்டர் வேன் புறப்படும் நாள்: 03.11.23 
நேரம் : இரவு 9 மணி
இடம்: நித்ய தீப தருமச்சாலை, 7 தருமச்சாலை வீதி, தண்டீஸ்வரம் கோவில் அருகில், வேளச்சேரி, சென்னை

வேனுக்கு கட்டணமில்லை. விருப்பமுள்ளவர்கள் நன்கொடைகள் வழங்கலாம்.

இரண்டு இரவுகள் பயணம், நாள் முழுவதும் தொண்டு, ஜோதி தரிசனம் காண விருப்பமுள்ளவர்கள் முன் பதிவிற்கு திரு V பாரதி ஐயா அவர்களை 9941035743 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

தயவுடன்…
என்றென்றும் சன்மார்க்க ஜீவகாருண்யப்பணியில்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
தீபம் அலுவலகம்: 044 4335 8242
தீபம் V பாரதி : 9941035743

Leave A Comment