Month: December 2022

410வது வார அகவல் பாராயணம்

29.12.2022 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், i) திரு அகவல் பாராயணம், ii) கூட்டு பிரார்த்தனை, iii) ஜோதி வழிபாடு, iv) அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் v) தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் !!!

அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையில் காலை மதியம் இரவு மூன்று வேளை உணவும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், தேடி வரக்கூடிய 2000 அன்பர்களுக்கு தினசரி பசியாற்றுவித்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.
Read more

25.12.2022-இன்று கிறிஸ்மஸ்சை முன்னிட்டு நமது தீபம் அறக்கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை…

25.12.2022-இன்று கிறிஸ்மஸ்சை முன்னிட்டு நமது தீபம் அறக்கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை மூலம் ரோட்டோரம் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும், தண்ணீர் பாட்டில்களையும், வாழைப் பழங்களையும் ஓடிச் சென்று தேடிச்சென்று வழங்கிய தீபத்தின் செயல்வீரர்கள், சேவகர்கள்,
Read more

வியாழன்தோறும் அகவல் பாராயணம்…

வாரந்தோறும் குரு வாரம் வியாழக்கிழமைகளில், திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அருளிய அகவல் பாராயணம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜோதி வழிபாடும், கூட்டு பிரார்த்தனையும், 2 வகையான பிரசாதமும் (கேசரி மற்றும் சுண்டல்), பசியாற்றுவித்தலும் (1000 இட்லி சட்னி குருமா) நடைபெற்றது.
Read more

தினசரி மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு உணவு.

14.12.22 இன்று குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கிய காட்சி. காட்டுப்பகுதியை ஒட்டி இருப்பதால் அங்கு கரண்ட் இல்லை. மிகவும் ஏழ்மையான குக் கிராமம். நம்மால் ஆன உதவி குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்குதல் மட்டுமே.
Read more

408வது வார அகவல் பாராயணம்

15.12.2022 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், i) திரு அகவல் பாராயணம், ii) கூட்டு பிரார்த்தனை, iii) ஜோதி வழிபாடு, iv) அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் v) தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

மாத பூசம்

சனிக்கிழமை இரவு(10.12.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை. திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளைக்கும் வழங்கியிருக்கிறார்.
Read more

அன்னதான தொண்டு செய்வோம் !!!

வருடம் முழுவதும் ஓய்வில்லாமல், தினசரி காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தருமச்சாலையில், மூலிகை கஞ்சி காய்ச்சுதல், கூலி தொழிலாளிகளுக்கு டாடா ஏஸ் வாகனத்தில் காலையில் கஞ்சி வழங்குதல், காய்கறி சுத்தம் செய்தல், காய்கறி வெட்டுதல், சமையல் செய்ய உதவுதல், உணவு பரிமாறுதல், பாத்திரம் கழுவுதல், தருமச்சாலை மற்றும் ஞானசபையை சுத்தம் செய்தல் போன்ற தெய்வீகப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Read more

407வது வார அகவல் பாராயணம்

08.12.2022 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், i) திரு அகவல் பாராயணம், ii) கூட்டு பிரார்த்தனை, iii) ஜோதி வழிபாடு, iv) அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் v) தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

வருடாந்திர வள்ளலார் காலண்டர்

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டில் அழகிய வண்ணத்தில் வள்ளலார் டெய்லி காலண்டர் பிரிண்ட் செய்து, தீபம் அறக் கட்டளை தீபம் நிர்வாகிகளுக்கும், தீபம் நன்கொடையாளர்களுக்கும், சன்மார்க்கிகளுக்கும், சன்மார்க்க சங்கங்களுக்கும் கொடுத்து மகிழ்வது வழக்கம். 2023 ஆண்டுக்கான 1000 காலண்டரை நாம் அச்சிட ஆர்டர் கொடுத்து இருக்கிறோம். சிவகாசியில் அச்சிடப்பட்டு திரு V பாரதி ஐயா தலைமையில் அடுத்த வாரம் தயார் செய்யப்பட்டு 25.12.22 அன்று வினியோகம் செய்ய இருக்கிறோம்.
Read more