Month: May 2021

*கொரோனா ஊரடங்கு காலத்தில் தீபம் அறக்கட்டளையின் சமுதாய அறப் பணிகள்*

*தீபம் அறக்கட்டளையின் தொடர் நன்கொடையாளர்களின் பேராதரவினால், இறையருள் பெறும் கருணையினால், எவ்வித தடையின்றி தினசரி நித்ய தீப தருமச்சாலையில் மற்றும் பல்வேறு கிராம சாலைகள் மூலம் இரவிலும் பகலிலும் தினசரி 2000 ஆயிரம் மக்களின் பசி போக்க, அடுப்பில் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. உணவு வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பசியோடு நீட்டும் கைகள் எல்லாம் இறைவனின் கைகள்.*
Read more

தீபம் தொண்டர்களுக்கு நன்றி!

100 மெய்யூர் கிராம ஏழ்மை நிலையிலுள்ள பழங்குடியின குடிசைகளில் வாழும் மக்களுக்கு 10 கிலோ முதல்தர அரிசியும் 22 வகையான மளிகைப் பொருட்களும், பழைய ஆடைகளும், சுவையான உணவும், குழந்தைகளுக்கு பிஸ்கட் இனிப்பும் நேரடியாக சென்று வழங்கப்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒவ்வொரு குடிசைக்கும் நேரடியாகச் சென்று அரிசியும் மளிகைப் பொருட்களும் வழங்கியது அற்புதமான சமுதாயப்பணி.
Read more

மெய்யூர் கிராமம்

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் மிக மிக ஏழ்மை நிலையில் உள்ள 100 பழங்குடி இன குடும்பங்களுக்கு கீழ்கண்ட 23 வகையான நிவாரண பொருட்களை தீபம் அறக் கட்டளை வரும் சனிக்கிழமையன்று (19.6.21) நேரில் சென்று அவரவர் குடிசையில் வழங்கயிருக்கிறது. திரு கந்தசாமி ஐயா முழு அரிசி உபயம் (1 டன்) ஏற்றுக்கொண்டு ₹40,000 நிதி வழங்கி இருக்கிறார். மற்ற மளிகைப் பொருட்களுக்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள் நிவாரண உதவிப் பொருட்கள் விவரம்:
Read more

ஞாயிற்றுக்கிழமை (முழு ஊரடங்கும் …தீபத்தின் தொண்டும்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பெருங்கருணையாலும், தீபம் அறக் கட்டளையின் நிரந்தர தொடர் நன்கொடையாளர்களின் தயவோடும் நேற்றைய தினம் (16-05-2021) முழு ஊரடங்கு நாளில் சென்னை மாநகர ரோட்டோரங்களில் (வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், சாயிபாபா கோவில், கச்சேரி சாலை, பட்டினப்பாக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளில்) ரோட்டோரம் பாலங்களுக்கு அடியில், சுரங்க பாதைகளில், பஸ் நிறுத்தங்களில், மர நிழல்களில் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு பசியால் வாடும் வறியவர்களை தேடிச்சென்று டாட்டா ஏஸ் வாகனத்தில் பசியாற்றுவிக்கப்பட்ட (சோறும் நீரும் வழங்கிய) காட்சி...
Read more

தர்மசாலை கட்டிட அலங்கார திருப்பணி

பல லட்சம் மக்கள் பசியாறிய / பசியாறி கொண்டிருக்கின்ற /பசியாற போகின்ற, சென்னை வேளச்சேரி புத்தேரி கரை தெருவில் 2,500 சதுர அடியில் புதிய தர்மசாலை கட்டிட வளாக திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. தற்போது படிகள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுவரை 70 சதவீத பணிகள் நிறைவு பெற்று இருக்கின்றன.
Read more

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

நிதிய தீபத் தருமச்சாலையின் கிளை சாலை மதுராந்தக தருமச்சாலை தயவு திரு கார்த்தி ஐயாவும் அவரது துணைவியாரும் அவரது முழு குடும்பமும் இந்த அருமையான அன்னதான பணியிலே நித்தியமும் தினமும் அருள் கஞ்சி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள் பசியாற்றி விட்டாலே பரம புண்ணியம் என்கின்ற வள்ளலாரின் திரு வாக்கிற்கு ஏற்ப பலப்பல பேருடைய பசி ஆற்று வித்தல் மிக அருமையாக செய்துகொண்டிருக்கும் கார்த்திக் ஐயாவுக்கு கோடான கோடி வணக்கங்கள் வாழ்த்துக்கள்
Read more

தீபம் அறக்கட்டளையின் தினசரி பசி ஆற்றுவிக்கும் சமுதாய பணி

தீபம் அறக்கட்டளையின் தினசரி பசி ஆற்றுவிக்கும் சமுதாய பணி!!!* 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔 *முழு ஊரடங்கும்... தீபத்தின் தொடர் சமுதாயப் பணியும்...* 🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️ அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்ம சாலையிலும், தமிழகத்தில் பல்வேறு கிராம தர்மசாலைகளிலும், நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், சாயிபாபா கோவில், கச்சேரி சாலை, பட்டினப்பாக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளில் […]
Read more