BEDSHEET TO ROAD SIDE PEOPLE

  • Home
  • BEDSHEET TO ROAD SIDE PEOPLE

21.1.23 – இன்று இரவு போர்வைகள் வழங்குதல்

21.1.23 இன்று சனிக்கிழமை இரவு சாலையோரம் ஆதரவற்று குளிரில் நடுங்கக் கூடிய மக்களுக்கு இரவு 12 மணி அளவில் தர்மச்சாலையில் பிரார்த்தனை செய்து, நாளை விடியற்காலை முதல் டாட்டா ஏஸ் வாகனத்தில் நேரில் சென்று தேடிச் சென்று நடைபாதைகள், பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், பாலங்களுக்கு அடியில், ஆதரவற்று வாழும் மக்களுக்கு, போர்வைகள் வழங்கப்படும். பசித்தவர்களுக்கு போர்வைகளுடன் உணவு வழங்கப்படும்.
Read more

21.1.23 – மார்கழி குளிரில் ரோட்டோரம் வாடும் ஆதரவற்றவர்களுக்கு நள்ளிரவில் போர்வைகள் வழங்குதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாக…

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் ரோட்டோரம் பாலங்களுக்கு அடியில், பாலங்களுக்கு மேல், பஸ் நிறுத்தங்களில், ரயில்வே நிலையங்களில், நடைபாதைகளில், நள்ளிரவில் சாலைகளை சுத்தம் செய்யும் பாமர மகளிருக்கு, ஆதரவற்றவர்களுக்கு, மார்கழி மாத கடுங்குளிரால் நடுங்கி கொண்டிருப்பவர்களுக்கு தொடர்ந்து 15 வது ஆண்டாக தேடிச்சென்று டாட்டா ஏஸ் வாகனம் மூலம் நள்ளிரவில் ஆரம்பித்து விடியற்காலை வரை நூற்றுக்கணக்கான போர்வைகள் மற்றும் உணவு வழங்கக்கூடிய அற்புதமான சமுதாய நிகழ்வு நடைபெறுகிறது.
Read more

*மார்கழி விடியலின் சிறப்பு!*

கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த நமது நாட்டில், அதில் ஒருவனான *“பேகன்”* எனும் அரசன், குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு மயிலுக்கு தான் போர்த்தியிருந்த விலையுயர்ந்த போர்வையை எடுத்து அதற்குப் போர்த்தி அதன் குளிரைப் போக்கி, அது ஆடதொடங்கியதை கண்டு மகிழ்ந்தான், என்பதை சங்ககால பாடல் கூறுகிறது. மார்கழி மாத குளிரில் நடுங்கிகொண்டே பாதி உறக்கத்திலிருப்பவர்களை பாதி இரவில் எழுப்பி, இதுவரை *10,000 போர்வைகளை* வழங்கியுள்ளது சென்னை, வேளச்சேரியில் இயங்கும் *தீபம் அறக்கட்டளை.*
Read more