Month: February 2021

*மா மனிதரை வணங்குகிறோம்*

அருட்பெரும் ஜோதி ஆண்டவருடைய பேராற்றல் பெரும் கருணையினால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் பல்வேறு கிராம நித்ய தீப தர்ம சாலைகளின் அன்னதான பணிகளும், அறப்பணிகளும், வாரி வழங்கும் வள்ளல்களாலும், மாதந்தோறும் தொடர் நன்கொடைகள் வழங்கும் அருளாளர்களின் அற்புத அருட்செயல்களாலும், தர்ம பணிகள் தடைபடாமல் அல்லும் பகலும் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தர்மம் செய்பவர்களுடைய திருப்பாதங்களை, தெய்வீகப் பாதங்களாக எண்ணி, வணங்கி மகிழ்கிறோம்.
Read more

150ஆம் ஆண்டு வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

அருட்பெரும் ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், வடலூர் சத்திய தருமச்சாலையில் தீபம் அறக்கட்டளை தொண்டர்களின் 3 நாட்கள் அன்னதான திருத்தொண்டு மற்றும் பேருந்தில் அழைத்துச் சென்று ஜோதி தரிசனம் மற்றும் வள்ளலார் அவதரித்த மருதூர், மேட்டுக்குப்பம், நீரோடை புனித ஸ்தலங்களுக்கு அழைத்துச் சென்ற சன்மார்க்க நிகழ்வு மிகவும் சீரும் சிறப்புமாக இனிதே நடைபெற்றது.
Read more

சென்னை வேளச்சேரி *நித்ய தீப தருமச்சாலையில்* *தைப்பூச திருவிழா*

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் உடைய பேரருள் பெரும் கருணையினால் தீபம் அறக்கட்டளையின் தைப்பூச திருவிழா நித்ய தீப தர்மசாலை வளாகத்தில் நாள் முழுவதும் கீழ்க்காணும் வகையில் இறையருளால் நடைபெற உள்ளது.
Read more

தொண்டு செய்பவர்கள் கடவுளில் பாதி

நமது தீபம் அறக் கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், சாயிபாபா கோவில், கச்சேரி சாலை, பட்டினப்பாக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளில் ரோட்டோரம் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டில்களையும் வாழைப் பழங்களையும் ஓடிச் சென்று தேடிச்சென்று வழங்கிய தீபத்தின் செயல்வீரர்கள், சேவகர்கள்.
Read more