Month: August 2022

ஏழை எளிய மாணவிகளுக்கு கல்வி உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் தாய் அல்லது தந்தை இழந்த அல்லது இருவரும் இழந்த ஏழ்மை நிலையில் உள்ள 100 மாணவ மாணவிகளிடமிருந்து, விண்ணப்பங்கள் பெற்று, ஆய்வு செய்து, பெற்றோர்களிடம் நேர்காணல் நடத்தி, கல்லூரி பெயரில், காசோலை வழங்கி வருகிறது.
Read more

மாத பூசம்

செவ்வாய்க்கிழமை இரவு(23.08.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை. 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
Read more

1189 வது மாணவிக்கு தீபத்தின் கல்வி உதவி ₹25,000/-

கோவை சிங்காநல்லூரில் தந்தையை இழந்த மற்றும் தாய் புற்று நோயால் கஷ்டப்படுவதை அறிந்து, இரண்டு பார்வைகளும் இழந்த பாட்டியுடன் சொல்லனா துயரத்தில் வளரும், கல்வி பயிலும் மாணவி P நிஷா அவர்களின் மேற்கல்வி BSc பாரா மெடிக்கல் கல்வி தொடர, தீபம் அறக்கட்டளை ₹25,000 கல்வி உதவியாக வழங்கியுள்ளது.
Read more

391 வது வார அகவல் பாராயணம்…

18.08.2022 - வியாழக்கிழமை, குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

பசியாற்றுவித்தலே பரம புண்ணியம்

திருவருட்பிரகாச வள்ளலார் காட்டிய சன்மார்க்க பாதையில், ஜீவகாருண்ய பணியாக, கிராமங்கள் தோறும் தருமச்சாலைகள் அமைத்து, மக்கள் பசி போக்கும் தொடர் ஆன்மநேயப் பணியை, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை செய்துகொண்டிருக்கிறது.
Read more

13ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையினாலும், வாரி வழங்கும் தயா உள்ளம் கொண்ட நல்லுள்ளங்களின் பெருந்தயவினாலும், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் 13ஆம் ஆண்டு (2022-2023 ம் கல்வி ஆண்டிற்கான) கல்வி உதவி தொகைக்கான நேர்காணல் கடந்த 9.8.2022 செவ்வாய்க்கிழமை சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச் சாலையில் காலை பேராசிரியர் K முத்துகுமரன் அவர்கள் தலைமையில் 4 குழுக்களாக... நடைபெற்றது. இதன் மூலம் 80 ஏழை மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
Read more

மேலும் ஓர் புதிய தருமச்சாலை

சன்மார்க்க பாதையில் ஜீவகாருண்யப் பணியாக, தினசரி மக்கள் பசிபோக்கும் ஆன்மநேயப் அறப்பணியில் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை பல்வேறு கிராம தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 மக்களின் பசி போக்கிக்கொண்டிருக்கிறது
Read more

390 வது வார அகவல் பாராயணம்

11.08.2022 - வியாழக்கிழமை, பௌர்ணமி, குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

13ஆம் ஆண்டு 100 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க – நேர்காணல்

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள். சென்ற வருடம் கொரோனா பேரிடர் காலத்திலும் 8 மருத்துவ உட்பட 60 மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.
Read more