Month: July 2021

தேவதானம் பேட்டை தர்மசாலை

தீபம் அறக்கட்டளையின் பல்வேறு தர்ம சாலைகளில் ஒன்றான செஞ்சி வட்டம் தேவதானம் பேட்டை கிராமத்தில் *திரு சி ஆர் சௌந்தர்ராஜன் ஐயா* அவர்கள் தலைமையில் தினசரி 300 பேருக்கு காலையில் அருள் உணவு வழங்கிக் கொண்டிருக்கிறார். தருமச்சாலைக்கு மேற்கூரை அமைப்பதற்காக தீபம் அறக்கட்டளை இடம் சீட் அமைக்க உதவி கோரியிருக்கிறார்.
Read more

தீபம் அறக்கட்டளையின் ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கு!

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தொடர்ந்து 24 ஆண்டுகளாக... (அரசு பதிவு செய்யப்பட்டு 14 ஆண்டு காலமாக ...) தினமும் ஏழைகளுக்கு அன்னதானம் - மக்கள் பசி போக்கும் சமுதாயப்பணி செய்து வருவது தாங்கள் அறிந்ததே. தற்போது தினசரி பல்வேறு கிராம தர்ம சாலைகள் மூலம் ஏறக்குறைய 2000 மக்களின் பசியை தீபம் போக்கி கொண்டிருக்கிறது. தினமும் வறுமையில் வாடும் மெய்யூர் கிராம பழங்குடி இன ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது.
Read more

வடலூர் சத்திய தருமச்சாலையில் தீபத்தின் 95வது மாத திருத்தொண்டு

திருவருட்பிரகாச வள்ளலார் 150 வருடங்களுக்கு முன்பாக மக்கள் பசி போக்க ஏற்றிய வடலூர் சத்திய தருமச்சாலை அணையா அடுப்பில் தீபம் அறக்கட்டளை கடந்த 95 மாதங்களாக மாத பூச நன்னாளில் மக்கள் பசி போக்க இரண்டு இரவுகள் சென்னையிலிருந்து வடலூர் பயணம் செய்து நாள் முழுவதும் அன்னதான பணி செய்யக்கூடிய தீபம் திரு தொண்டர்களின் திருக்காட்சி.
Read more

முதல் மேலும் ஒரு கிராம தருமசாலை ஆரம்பம்

மெய்யூர் கிராம காப்பு காடுகளை ஒட்டி வாழக்கூடிய எழுபதுக்கும் மேற்பட்ட பழங்குடி இன குடும்பங்கள் மிகவும் வறுமையில் வாடுவதை நேரில் கண்ணுற்று அவர்களின் குழந்தைகளுக்கு 2 வயது முதல் 10 வயதுக்கு உட்ப்ட வறுமையில் வாடும் 100 குழந்தைகளுக்கு 10.07.21 முதல் *தினசரி இரவு உணவு* வழங்க தீபம் அறக்கட்டளை நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது.
Read more

இன்று நியூ ஹோப் குழந்தைகளுக்கு சிறப்பு மதிய உணவு

இன்று சென்னை பெரும்பாக்கம் நியூ ஹோப் குழந்தைகள் காப்பகத்தில் 125க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாழை இலையில் தலை இலையில் நுனி இலையில் மதியம் சிறப்பு உணவு வழங்கப்பட்டது. திரு டிவி ரமேஷ் அவர்கள் பாடல்கள் மூலம் குழந்தைகளை ஆடி பாடி மகிழ்வித்தார். திரு ரமேஷ் அவர்களுக்கு நன்றி.
Read more