Medical Aid

“உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே”
“மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே”
“என்றே யென்னினு மிளமையோ டிருக்க
நன்றே தருமொரு ஞானமா மருந்தே”
“மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே”

என்ற வள்ளல் பெருமானின் அகவல் வரிகளுக்கு ஏற்ப நோயினால் வாடுபவர்களுக்கு தீபம் அறக்கட்டளை பல்வேறு மருத்துவ உதவிகளை செய்து வருகிறது.

தீபத்தின் மருத்துவ சேவைகள்:

ஆண்டு தோறும் நித்ய தீப தருமச்சாலையில் சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

அயனாவரத்தை சார்ந்த திரு.சேகர் என்பவருக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்காக மாதம் தோறும் ஐந்தாயிரம் மதிப்புள்ள காசோலை வழங்கப்படுகிறது.