Month: September 2022

வியாழன்தோறும் அகவல் பாராயணம்
(397வது வாரம்)

சென்னை வேளச்சேரியில் இறைவனின் திருவருளால் அமைக்கப்பட்ட நித்ய தீப தருமச்சாலையில், தினசரி 3 வேளையும் மக்கள் பசி போக்கும் தெய்வீக பணி தடை படாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
Read more

வள்ளலார் 200 விழா – 5.10.22 (புதன்)

5.10.22 அன்று சென்னை ராஜ அண்ணாமலைபுரம், கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், தமிழக அரசு நடத்தும் வள்ளலார் 200 விழாவில், தமிழகத்திலிருந்து பல்வேறு கிராமங்களிலிருந்து, நகரங்களிலிருந்து ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் சென்னைக்கு வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் நமது சென்னை வேளச்சேரி, நித்ய தீப தருமச்சாலை அன்போடு வருக வருக என்று வரவேற்கிறது. 4.10.22 காலை முதல் நமது தருமச்சாலையில் தங்கலாம்.
Read more

ஜவ்வாது மலையில் தினசரி அன்னதானம்…

கிராமந்தோறும் தர்மச்சாலைகள் அமைத்து, பசியோடு வாடக்கூடிய மக்களுக்கு உணவு வழங்கும் நோக்கில், தீபம் அறக்கட்டளை இதுகாறும் பல்வேறு கிராமச் தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் உணவு வழங்கி வருகிறது.
Read more

தருமச்சாலையில் பசியாற தினசரி மக்கள் கூட்டம்

நமது சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையிலே தினசரி 3 வேளை அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் பசியாற வரும் மக்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. திருவருள் சம்மதம். குறிப்பாக மதியம் அதிகப்படியான ஜனங்கள் பசியோடு வருவதால், தினசரி இரண்டு மூன்று முறை சூடாக சாதம் வடிக்கும் பேரானந்த பாக்கியத்தை இறைவன் நமது தருமச்சாலைக்கு கொடுத்திருக்கிறார்.
Read more

இயற்கை சித்த மருத்துவ முகாம்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ~~~~~~~ கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது. ~~~~~~~ ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் சிவம் V.P.மாதேஸ்வரன் அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.
Read more

396 வது வார அகவல் பாராயணம்

22.09.2022 - வியாழக்கிழமை, குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more

வடலூர் மாத பூசம். 

21.9.22 (புதன் கிழமை) - இன்று மாத பூசத்தை முன்னிட்டு, வடலூர் சத்திய தருமச்சாலையில் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் திருக்கரங்களால் ஏற்றிய அணையா அடுப்பில் தீபம் அறக்கட்டளையின் 18 திருத்தொண்டர்கள்
Read more

395 வது வார அகவல் பாராயணம்

15.09.2022 - வியாழக்கிழமை, குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
Read more