Month: January 2023

தேவதனாம்பேட்டை பூமி தானம்

திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி வட்டம், மலையும் மலை சார்ந்த தேவதனாம்பேட்டை கிராமத்தில், வேட்டவலம் ஜமீன்தாரின் மனைவியின் தீராத நோயான சூலை நோயை வள்ளலார் குணப்படுத்திய ஊருக்கு அருகில், வள்ளலார் தவம் செய்த கரியமாமலை அடிவாரத்தில் 1.5 ஏக்கர் பரப்பளவில் விளை நிலம் அமைய திருவுள்ளம் ஆணையிட்டு, நேரில் பார்வையிட்டு, விரைவில் கிரயம் செய்ய உள்ளோம்.
Read more

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா: 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அழைப்பு

ஒவ்வொரு ஆண்டும் வடலூர் தைப்பூச ஜோதி காண விரும்பக்கூடிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களை, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் இருந்து பேருந்தில் அழைத்துச் சென்று,
Read more

சென்னை மாநகர சாலையோரத்தில் படுத்து உறங்கும் ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் போர்த்தி மகிழ்விக்கும் நிகழ்வு

தருமமிகு சென்னை மாநகர் வேளச்சேரி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, தரமணி, அடையாறு, சைதாப்பேட்டை, நந்தனம் ஆகிய பகுதிகளில் உள்ள இரயில் நிலையம், பஸ் நிலையம், பாலங்களுக்கு அடியில், நடைபாதைகளில், மற்றும் சாலையோரங்களில், மார்கழி மாத கடுங்குளிரில், பரட்டை தலையுடன் சுருண்டு படுத்து உறங்கும், ஆதரவற்றவர்களை வறியவர்களை தேடிச் சென்று (21-01-2023) நள்ளிரவு 12-30 மணி முதல் (22-01-2023) அதிகாலை 4-30 மணிவரை போர்வைகளை போர்த்தி, சிறப்பு அன்னம் தந்து மகிழ்வித்த ஓரிரு காட்சிகளை படத்தில் காணுங்கள்.
Read more

21.1.23 – இன்று இரவு போர்வைகள் வழங்குதல்

21.1.23 இன்று சனிக்கிழமை இரவு சாலையோரம் ஆதரவற்று குளிரில் நடுங்கக் கூடிய மக்களுக்கு இரவு 12 மணி அளவில் தர்மச்சாலையில் பிரார்த்தனை செய்து, நாளை விடியற்காலை முதல் டாட்டா ஏஸ் வாகனத்தில் நேரில் சென்று தேடிச் சென்று நடைபாதைகள், பஸ் நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், பாலங்களுக்கு அடியில், ஆதரவற்று வாழும் மக்களுக்கு, போர்வைகள் வழங்கப்படும். பசித்தவர்களுக்கு போர்வைகளுடன் உணவு வழங்கப்படும்.
Read more

21.1.23 – மார்கழி குளிரில் ரோட்டோரம் வாடும் ஆதரவற்றவர்களுக்கு நள்ளிரவில் போர்வைகள் வழங்குதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாக…

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் ரோட்டோரம் பாலங்களுக்கு அடியில், பாலங்களுக்கு மேல், பஸ் நிறுத்தங்களில், ரயில்வே நிலையங்களில், நடைபாதைகளில், நள்ளிரவில் சாலைகளை சுத்தம் செய்யும் பாமர மகளிருக்கு, ஆதரவற்றவர்களுக்கு, மார்கழி மாத கடுங்குளிரால் நடுங்கி கொண்டிருப்பவர்களுக்கு தொடர்ந்து 15 வது ஆண்டாக தேடிச்சென்று டாட்டா ஏஸ் வாகனம் மூலம் நள்ளிரவில் ஆரம்பித்து விடியற்காலை வரை நூற்றுக்கணக்கான போர்வைகள் மற்றும் உணவு வழங்கக்கூடிய அற்புதமான சமுதாய நிகழ்வு நடைபெறுகிறது.
Read more

412வது வார அகவல் பாராயணம்…

12.01.2023 - வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில்,
Read more

தினசரி மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு உணவு.

இன்று குழந்தைகளுக்கு உணவு வழங்கிய காட்சி. காட்டுப்பகுதியை ஒட்டி இருப்பதால் அங்கு கரண்ட் இல்லை. மிகவும் ஏழ்மையான குக் கிராமம். நம்மால் ஆன உதவி குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்குதல் மட்டுமே.
Read more

மாத பூசம்

திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளைக்கும் வழங்கியிருக்கிறார்.
Read more