16.11.2023 – வியாழந்தோறும் , குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் மாலை 6 மணி அளவில், அருளாற்றல் நிரம்பிய ஞானசபையில், ஆதம்பாக்கம் திரு V பவானி சங்கர் ஐயா தலைமையில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, *எல்லா உயிர்கள் இன்புற்று வாழவும், *திருமண தடை நீங்கவும், *தொழில்வளம் பெருகவும், *கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், *மனக்கஷ்டம் பணக்கஷ்டம் நீங்கவும், *நோய் நொடியிலிருந்து விடுபடவும், *நிறைவோடும் நிம்மதியோடு வாழவும், *ஞானம் பெறவும், ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் இனிதே நடைபெறும்.
தீபம் நிர்வாகிகள், தீபம் சேவடிகள், தீபம் நன்கொடையாளர்கள், சன்மார்க்க மற்றும் ஆன்மிக தேடல் உள்ள அன்பர்கள், திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அருளிய அகவல் பாராயணத்தில் கலந்து கொள்ளுமாறு தீபம் அறக்கட்டளை அன்போடு வருக வருக என்று அழைத்து மகிழ்கிறது…
நித்ய தீப தர்மச்சாலை தருமச்சாலை வீதி தண்டீஸ்வரம் கோவில் அருகில் வேளச்சேரி சென்னை 9444073635