25.1.24: தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தணிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி
இன்று தீபம் அறக்கட்டளை தைப்பூச திருநாளை திரை நீக்கிய ஜோதி தரிசனமாகவும் … நாள் முழுவதும் தொடர் அன்னதானம் வழங்கியும்… கொண்டாடி வருகிறது.
திரு V பாரதி அவர்கள் தலைமையில் வடலூர் சத்திய தர்மச்சாலையில் 25 சேவடிகள் தொடர்ந்து மூன்று நாட்களாக இரவும் பகலும் மக்கள் பசிப்போக்கும் அன்னதான பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
தீபம் அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் K முத்துக்குமார் ஐயா அவர்கள் தலைமையில் சென்னையில் இருந்து வடலூருக்கு பேருந்து மூலமாக தைப்பூச ஜோதி தரிசனம் காணவும் வடலூர் வள்ளல் பெருமானார் எழுந்தருளிய புனித ஸ்தலங்களுக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அறக்கட்டளையின் அறங்காவலர் திரு V பவானி சங்கர் ஐயா அவர்கள் தலைமையில் சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்மச்சாலையில் 7 திரை நீக்கிய ஜோதி தரிசனமும்… மூன்று வேளையும் தலை வாழை இலையில் சிறப்பு அன்னதான பணிகளும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
தைப்பூச திருநாளை முன்னிட்டு அன்னதானத்திற்காக நிதியாகவும்… அரிசி மற்றும் மளிகை பொருட்களாகவும் … வாரி வழங்கிய வள்ளல்களை எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பாதம் பணிந்து பிரார்த்திக்கிறோம்.
வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
வாழ்க வாழ்க வள்ளல் மலரடி வாழ்க.
தயவுடன்…
தைப்பூச நல்வாழ்த்துக்களுடன்...
தீபம் பாலா நிறுவனர் தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635