தீபம் அறக்கட்டளை

வாரீர் ! ஆன்மீக வளர்ச்சி பெற்று, ஆனந்தமாய் வாழ்வோம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வாழ்வில் வெற்றி பெறுவது மட்டும் மகிழ்ச்சி அல்ல.
மகிழ்ச்சியோடு வாழ்வது தான் வாழ்க்கையின் வெற்றி.
👍👏👍👏👍👏👍👏👍👏
தயவுடையீர்,
அருட்பெருஞ்சோதி ஆண்டவர் பேரருள் பெரும் கருணையினால், தீபம் அறக்கட்டளைக்கு சென்னை வேளச்சேரியில் சொந்தமாக இடத்தையும், புண்ணியம் பெற தர்மச்சாலையும், அறிவை ஞானமாக மாற்ற ஞான சபையும் கொடுத்திருக்கிறார். ஞான சபையில் நித்தியமாக முச்சுடர்” பிரகாசித்து தெய்வீக ஒளி அலைகளை தர்ம சாலை முழுவதும் பரப்பி அருளாற்றல் அன்னதான அற்புதம் செய்துக்கொண்டிருக்கிறது.
🪔🌹🪔🌹🪔🌹🪔🌹🪔🌹
தீபத்தின் அனைத்து அன்றாட, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர நன்கொடையாளர்களும், சன்மார்க்க சம்பந்திகளும், ஆன்மிக தேடல் உள்ளவர்களும், தங்களின் ஓய்வான நேரங்களில், தினசரி அல்லது வார நாட்களில், நேரம் கிடைக்கும் போது, தர்மச்சாலைக்கு குடும்பத்துடன் நேரில் வந்திருந்து அருளையும், அமைதியும் பெற்றுச் செல்லுங்கள் என்று தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.
🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻
நம் மனம் வாக்கு செயலால் செய்த தீவினைகளிலிருந்து விடுபட, நல்வினைகளில் குறிப்பாக தொடர் தர்மத்திலும், தொடர் தொண்டிலும் நாட்டம் கொள்வோம்.
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
புண்ணியம் வேண்டுமா ?
தர்மம் செய்யுங்கள். தொடர் தர்மம் செய்யுங்கள்.

ஆண்டு பல நீண்டு வாழ,
தொடர் அன்னதான தொண்டு செய்யுங்கள்.
🍑🌴🍑🌴🍑🌴🍑🌴🍑🌴
மன அமைதி வேண்டுமா?
நமது ஞான சபை பாதாள தியான மையத்தில் தினசரி தியானம் செய்யுங்கள்.

ஞானம் வேண்டுமா?
தர்மச்சாலைக்கு நேரில் வந்திருந்து தினம் ஒரு அருட்பா படியுங்கள்.

அண்ட பிண்டங்களை பற்றிய தகவல் வேண்டுமா?
வாரந்தோறும் தருமச்சாலையில் நடைபெறும் வியாழக்கிழமை அகவல் பாராயணத்தில் கலந்து கொள்ளுங்கள்.
🌺🍋🌺🍋🌺🍋🌺🍋🌺🍋
இறைவனை காண வேண்டுமா?
நித்திய ஜோதியை நித்தியம் பாருங்கள்.

ஆரோக்கியம் வேண்டுமா?
தீபத்தின் மாதாந்திர மருத்துவ முகாமை பயன்படுத்துங்கள். இயற்கை உணவை உட்கொள்ளுங்கள்.

இறைவன் அருள் வேண்டுமா?
தருமசாலையில் தொண்டு செய்ய வாருங்கள்.

நிம்மதி வேண்டுமா?
தர்மச்சாலையில் உள்ள தெய்வீக சுவாசத்தை சுவாசிக்க வாருங்கள்.

கிராம சேவை செய்ய வேண்டுமா?
அமைதி வேண்டுமா? இயற்கை எழில் கொஞ்சும் செஞ்சி தேவதானம்பேட்டை கிராமம் ஜோதி மாமலைக்கு வாருங்கள்.
🌾🍈🌾🍈🌾🍈🌾🍈🌾🍈
நம்மிடம் உள்ள தீய குணங்களை எரிக்க / அழிக்க வேண்டுமா?
திருவருட்பிரகாசர் வள்ளல் பெருமானார் ஏற்றிய வடலூர் சத்ய தருமச்சாலை அடுப்பில் மாத பூச நன்னாளில் அன்னதான தொண்டு செய்ய வாருங்கள்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥
தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம், மனநலம், பொருள் வளம், நீள் ஆயுள், மெய்ஞானம் பெற்று விளங்க, “பொருளை அருளாக மாற்றும்” நித்ய தீப தர்மச்சாலையை முழுமையாக பயன்படுத்த வருமாறு தீபம் தங்களை அன்போடு உரிமையோடு சகோதர பாசத்தோடு, அழைத்து மகிழ்கிறது.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோம்.

காற்று நம் உடலில் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுதே மேற்கண்ட அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்வாங்கு வாழ பிரார்த்திக்கிறோம்.

கலி யுகத்தில், மாய உலகில் சிக்கிக்கொள்ளாமல், ஞானத்தினால் துன்பம் தவிர்த்து, இன்பம் காண, ஆன்மீக வளர்ச்சியில் பேரானந்த பாதையில் பயணிப்போம்.
🌷🍚🌷🍚🌷🍚🌷🍚🌷🍚
“அருள் பெற” ஆசை உண்டேல் வம்மின்! – வள்ளலார்

உள்ளன்போடு அழைத்து மகிழ்வது…
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நித்ய தீப தருமச்சாலை
தருமச்சாலை வீதி
தண்டீஸ்வரம் கோவில் அருகில்
வேளச்சேரி சென்னை
9444073635

Leave A Comment