13ஆம் ஆண்டு 100 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க – நேர்காணல்
திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.
சென்ற வருடம் கொரோனா பேரிடர் காலத்திலும் 8 மருத்துவ உட்பட 60 மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.