SOCIAL ACTIVISTS

வறுமை கொடியது

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் தீபம் அறக்கட்டளை கடந்த 15 மாதங்களாக கொரோனா கொடும் தொற்று ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, சுவையான, மதிய உணவு வழங்கி வருவது தாங்கள் அறிந்ததே. இதற்கான மாதாந்திர செலவு₹40,000/-.
Read more

தீபம் அறக்கட்டளையின் 25வது ஆண்டு மலர்

சித்திரை 1 அன்று (14.4.22) சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற தீபம் அறக்கட்டளை விழாவில் தீபத்தின் சமுதாய பணிகள் குறித்து 48 பக்கங்கள் கொண்ட வண்ண வடிவில் 25ஆவது ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. விழாவிற்க்கு வந்திருந்த அனைவருக்கும் மஞ்சள் வண்ண பிரசாத பையுடன் ஆண்டு மலர் வழங்கப்பட்டது.
Read more

நெஞ்சார்ந்த நன்றி!

தீபத்தின் கும்பாபிஷேக விழா சிறப்படைய, அருள்நிதி வாரி வழங்கிய அருளாளர்களை வணங்குகிறோம். வாழ்த்துகிறோம். தங்களின் நன்கொடைகள் விழாவை திருவிழாவாக... பெருவிழாவாக... மாற்றியது.
Read more

கோடைகால நீர் மோர்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் (கோடை காலம் முடியும் வரை) தினசரி நண்பகல் 12-00 மணிமுதல் வேளச்சேரி நித்ய தீப தருமசாலை ஆர்ச் அருகில் வழங்கப்படுகிறது.
Read more

கடவுள் இருக்கிறார்.

சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் கோவில் அருகில் தீபம் தருமச்சாலை, ஞான சபை அமைக்க மற்றும் ஏப்ரல் 14 & 15 தேதிகளில் சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவிற்கு ஏராளமான நிதியும், பொருட்செலவும் ஆகியிருக்கும். ஏதேனும் நன்கொடை வேண்டுமா என்று பெயர் வெளியிட விரும்பாத கேட்ட மாமனிதரை தெய்வமாக நினைந்து வழிபடுகிறோம்.
Read more

மனித பிறப்பு !

மனிதபிறப்பு என்பது முதல்பிறப்பா? கடைசிபிறப்பா? என்ற கேள்வி பல்லாயிரம் ஆண்டுகளாக சரியான விடைதெரியாத புதிராகவே இருக்கிறது. பல ஆன்மீக அருளாளர்கள் தாவரம்தான் முதல் பிறப்பு அதற்கு அடுத்து ஊர்வன பறப்பன நடப்பன தேவர் அசுரர் இறுதியாக மனிதர் என சொல்லி உள்ளார்கள் மனிதபிற்ப்பு என்பது உயர்ந்த ஆறு அறிவுள்ள பிறப்பு என்றும் சொல்லி உள்ளார்கள்.
Read more

65 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. 01.04.22 இன்று வெள்ளித் திரு நாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் உதவி பெற்ற பார்வையற்ற குடும்பங்கள் - 65. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ தரமான அரிசி மற்றும் பருப்பு எண்ணெய் வழங்கப்பட்டது. அனைவருக்கும் தருமசாலையில் வயிறார உணவு வழங்கப்பட்டது.
Read more

கிராம சேவை

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் ஜீவகாருண்ய பணிகளில் ஒன்றான, பசு தானம் - இன்று காலை (7.3.22) ஜீவா நகர் கிராம பெண்மணிக்கு *கிராம சேவையாக* வழங்கப்பட்டது.
Read more

வள்ளலார் தர்மசாலை மற்றும் ஞான சபை புதிய கட்டடம் திறப்பு விழா

சென்னை வேளச்சேரியில் 1200 ஆண்டுகள் பழமையான (9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட) தண்டீஸ்வரர் கோவில் அருகில் புத்தேரிகரைத்தெரு எனும் வள்ளலார் தருமச்சாலை வீதியில், *திருவருட்பிரகாச வள்ளலார் பேரருள் பெரும் கருணையினால்,* தர்மசாலை மற்றும் ஞான சபைக்கென புதிய கட்டடம் அமைத்து, அதை எதிர்வரும் புத்தாண்டான 2022 ஏப்ரல் 11, 12, 13 தொடர்ந்து மூன்று நாட்கள் திருவருட்பா ஆறு திருமுறைகள் (6000 பாடல்கள்) முற்றோதலும்,
Read more

மஹா சிவராத்திரி

*மஹா சிவராத்திரி* *சிறப்பு சொற்பொழிவு, *தெய்வீக இசை கச்சேரி,* *வழிபாடு, பிரசாதம்* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 நாள்: 01-03-2022 செவ்வாய்க்கிழமை நேரம்: இரவு 9-00 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை இடம்: அருள்மிகு கருணாம்பிகை ஸமேத தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி, சென்னை-42 *தெய்வீக இசை: நளினி சங்கர் குழுவினர், மடிப்பாக்கம் சென்னை* (தெய்வீக இசை உபயம்: திரு N குமரகுருபரன், நந்தினி பில்டர்ஸ்) 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை வேளச்சேரியில், புராதமான, 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த […]
Read more