Blog

150ஆம் ஆண்டு வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா

அருட்பெரும் ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், வடலூர் சத்திய தருமச்சாலையில் தீபம் அறக்கட்டளை தொண்டர்களின் 3 நாட்கள் அன்னதான திருத்தொண்டு மற்றும் பேருந்தில் அழைத்துச் சென்று ஜோதி தரிசனம் மற்றும் வள்ளலார் அவதரித்த மருதூர், மேட்டுக்குப்பம், நீரோடை புனித ஸ்தலங்களுக்கு அழைத்துச் சென்ற சன்மார்க்க நிகழ்வு மிகவும் சீரும் சிறப்புமாக இனிதே நடைபெற்றது.
Read more

சென்னை வேளச்சேரி *நித்ய தீப தருமச்சாலையில்* *தைப்பூச திருவிழா*

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் உடைய பேரருள் பெரும் கருணையினால் தீபம் அறக்கட்டளையின் தைப்பூச திருவிழா நித்ய தீப தர்மசாலை வளாகத்தில் நாள் முழுவதும் கீழ்க்காணும் வகையில் இறையருளால் நடைபெற உள்ளது.
Read more

தொண்டு செய்பவர்கள் கடவுளில் பாதி

நமது தீபம் அறக் கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை டாடா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மயிலாப்பூர், சாயிபாபா கோவில், கச்சேரி சாலை, பட்டினப்பாக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளில் ரோட்டோரம் வாழும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டில்களையும் வாழைப் பழங்களையும் ஓடிச் சென்று தேடிச்சென்று வழங்கிய தீபத்தின் செயல்வீரர்கள், சேவகர்கள்.
Read more

நிவர் புயல் – தொடர்ந்து மூன்று நாட்களாக… மக்களின் பசி போக்கும் சமுதாயப்பணி

தருமச்சாலையில் பசியோடு தேடி வருபவர்களுக்கும்... ரோட்டோரங்களில் பசியோடு வாடும் ஆதரவற்றவர்களுக்கு தேடிச் சென்றும்... மக்களின் பசி போக்கும் சமுதாய பணி... மரங்களுக்கு கீழே... பசியோடு வாடும் மக்களுக்கு பசி போக்க ... தேடிச் சென்று... தொடர்ந்து உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்ட காட்சி... தங்களின் தெய்வீக பார்வைக்கு... பசித்த ஓர் ஏழையின் வயிற்றுக்கு இடுகின்ற அன்னம் இறைவனை சென்று அடைகிறது.
Read more

நிவர் புயல் – தொடர்ந்து மூன்று நாட்களாக… மக்களின் பசி போக்கும் சமுதாயப்பணி

தருமச்சாலையில் பசியோடு தேடி வருபவர்களுக்கும்... ரோட்டோரங்களில் பசியோடு வாடும் ஆதரவற்றவர்களுக்கு தேடிச் சென்றும்... மக்களின் பசி போக்கும் சமுதாய பணி... மரங்களுக்கு கீழே... பசியோடு வாடும் மக்களுக்கு பசி போக்க ... தேடிச் சென்று... தொடர்ந்து உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்ட காட்சி... தங்களின் தெய்வீக பார்வைக்கு... பசித்த ஓர் ஏழையின் வயிற்றுக்கு இடுகின்ற அன்னம் இறைவனை சென்று அடைகிறது.
Read more

சாலையோரங்களில் இருப்பவர்களைச் தேடிச்சென்று உணவு வழங்குதல்

முழு ஊரடங்கின் போது ரோட்டோரங்களில் ஆதரவற்றவர்களுக்கு பசிப்பிணி போக்கும் பணி...தொடர்ந்து நான்கு மாதங்களாக...
Read more

தீபம் அறக்கட்டளையின் 4ஆம் கட்ட நிவாரண பணி – மதுராந்தகம்

01.08.2020 (சனிக்கிழமை) - அன்று மதுராந்தகம் அருகிலுள்ள ஐந்து கிராமங்களில் (ஜல்லிமேடு, கழனிபாக்கம், எண்டத்தூர், தாயந்தப்பாக்கம், சின்ன காலனி கிராமங்கள்) கூலி வேலை இல்லாமல், வறுமையில் வாடும் குடிசைகளில் வாழும் 110 ஏழை குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10கிலோ முதல் தர அரிசி, மற்றும் 13 வகையான மளிகை பொருட்கள் தீபம் அறக்கட்டளை வாகனம் மூலம் நேரில் சென்று வழங்கப்பட்டன. அனைவருக்கும் பசி போக்க உணவு வழங்கப்பட்டது.
Read more

சாலையோரங்களில் இருப்பவர்களைச் தேடிச்சென்று உணவு வழங்குதல்

முழு ஊரடங்கின் போது ரோட்டோரங்களில் ஆதரவற்றவர்களுக்கு பசிப்பிணி போக்கும் பணி...தொடர்ந்து நான்கு மாதங்களாக...
Read more

25.12.2018 – கஜா புயல் மூன்றாம் கட்ட சேவை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிட சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் மூன்றாம் கட்ட நிவாரணப் பொருட்களாகிய மூன்று டன் அரிசி, மற்றும் வேதாரண்யம் தருமச்சாலைக்கு தேவையான ₹28,000/- மதிப்புள்ள சமையல் பாத்திரங்கள் நேற்று (25-12-2018) நேரில் வழங்கப்பட்டது. முன்னதாக கஜா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஆதிவாசி கிராமமான கோடியக்கரை பகுதி மக்களுக்கும், வேதாரண்யம் கடற்கரை பகுதி மக்களுக்காக நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான 25 Kg அரிசியை வீதி வீதியாக, வீடு வீடாக குடிசைகளில் வாழும் மிக மிக பின் தங்கிய குடிசைகளில் வாழும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட காட்சியை படத்தில் காணுங்கள்.
Read more

மூன்றாம் கட்ட கஜா புயல் நிவாரணம்

பேரன்புள்ளம் கொண்ட ஆன்மநேய உடன்பிறப்புக்களே கடந்த மாதம் 15-11-2018 அன்று இயற்கை சீற்றமான கஜா புயலினால் சோழவள நாட்டையே பதம் பார்த்து டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களையே புரட்டி போட்டு ஒரு மாதம் காலம் கடந்தும் மக்களின் அன்றாட வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி, சொந்த மண்ணில் அகதிகளாக, ஆதரவற்றவர்களாக இன்றும் நம் கண் முன்னே காட்சி அளிப்பது சொல்லொண்ணா துயரமாக இருக்கிறது.
Read more