இடைவிடாது கொட்டும் கன மழையிலும், தடைபடாது தீபத்தின் பசிப்போக்கும் தொடர் சமுதாயப் பணி.

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • இடைவிடாது கொட்டும் கன மழையிலும், தடைபடாது தீபத்தின் பசிப்போக்கும் தொடர் சமுதாயப் பணி.

புயல், வெள்ளம், தொடர் மழை, கனமழை என்ற அறிவிப்பால் மக்கள் ஆங்காங்கே வீடுகளில் மிகவும் பாதுகாப்பாக இருக்கவும்.

இருப்பினும் சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மச்சாலையில் மக்கள் பசி போக்க தொடர்ந்து அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது.

கொட்டும் கனமழையிலும், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு இன்று ஆறு வகையான சிறப்பு உணவு இனிப்புடன் தயாராகிக் கொண்டிருக்கிறது. சிறு காணொளியை தங்களின் தெய்வீக பார்வைக்காக இணைத்துள்ளோம்.

தர்மச்சாலையில் கொட்டும் கனமழையிலும் வாழை இலையில் தடைபடாது மக்கள் பசி போக்கும் சமுதாயப் பணி தொடர்ந்து நாள் முழுவதும் நடைபெறுகிறது.

தினசரி மக்களின் பசி போக்க, மாரி போல் பாரி போல் வாரி வழங்கும் தீபத்தின் நிரந்தர நன்கொடையாளர்களுக்கும், வாழும் வள்ளல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு எல்லா நன்மைகளும் வழங்க பிரார்த்திக்கிறோம்.

வேளச்சேரி சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் நேரில் சென்று உணவு பொட்டலங்கள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

களைப்பில்லாமல்… சலிப்பில்லாமல்… அலுப்பில்லாமல், “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு” என்று தொடர் தொண்டு செய்யும் தீபத்தின் சேவடிகளுக்கு நன்றி.

எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும், தடை படாமல் மக்கள் பசி போக்கும் உயிர் உபகார பணி, ஜீவகாருண்யப் பணி, மக்கள் நலப்பணி, சமுதாயப்பணியை சிறிய அளவில் வழங்கிய இறைவனுக்கு நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றியுடன்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
Gpay : 9444073635

Leave A Comment