தீபம் அறக்கட்டளையின் 28 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் – 22.09.24(ஞாயிற்றுக்கிழமை)….

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • தீபம் அறக்கட்டளையின் 28 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் – 22.09.24(ஞாயிற்றுக்கிழமை)….

சென்னை வேளச்சேரி
தீபம் அறக்கட்டளையின் 28 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் – 22.09.24
(ஞாயிற்றுக்கிழமை)
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை சமுதாய பணிகளில் 28 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதன் பொருட்டு 22.9.24 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வேளச்சேரி நமது நித்ய தீப தர்மச்சாலையில் 28ஆம் ஆண்டு விழாவை நாகை திரு சைவமணி ஐயா அவர்கள் தலைமையில் மிக எளிமையாக நாள் முழுவதும் கொண்டாட இருக்கிறோம்.

தீபம் நிர்வாகிகள், தீபம் திருத்தொண்டர்கள், தீபம் நன்கொடையாளர்கள், சன்மார்க்க சம்மந்திகள், நலம் விரும்பிகள் அனைவரும் விழாவில் பங்கேற்க வருக வருக என்று அன்புடன் அழைத்து மகிழ்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி.
💥💥💥💥💥💥💥💥💥💥
ஆண்டு விழா நிகழ்வுகள்:
20.9.24: வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல்…

21.9.24 சனிக்கிழமை மாலை 6 மணி வரை…
🌟 ஆறாம் திருமுறை முற்றோதல்.

22.9.24 ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி முதல்… மாலை 6 மணி வரை…

🌟 ஞான தீபம் ஏற்றுதல்
🌟 திருவடிப் புகழ்ச்சி
🌟 திருப்பள்ளி எழுச்சி
🌟 அகவல் பாராயணம்
🌟ஜோதி புஷ்ப அலங்காரம்
🌟 உலகு கட்டியாளும் நீதி கொடி உயர்த்துதல்
🌟 சான்றோர்களின் சொற்பொழிவுகள்
🌟பட்டிமன்றம்
🌟விருது வழங்குதல்
🌟அருட்பா இசை நிகழ்ச்சி
🌟வாழ்த்துரை
🌟ஜோதி வழிபாடு
🌟நாள் முழுவதும் சிறப்பு அன்னம்.
💫💫💫💫💫💫💫💫💫💫
தீபம் அறக்கட்டளையின் அன்றாட அன்னதானப் பணிகளும், அறப்பணிகளும், 27 ஆண்டுகளாக தடைபடாமல் நடைபெற பேராதரவு தரும் நல் உள்ளங்களை வணங்கி மகிழ்கிறோம்.

தீபம் அறக்கட்டளையின் 28 ஆம் ஆண்டு விழா குறித்த ஜீவகாருண்யா எழுச்சி பெருவிழா அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
ஆண்டு விழாவில் தாங்கள் தங்கள் குடும்ப சமேதரராய் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைத்து மகிழ்கிறோம்.
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
தயவுடன் …
என்றென்றும்… ஜீவகாருண்ய சிறு பணியில்…
தீபம் பாலா
நிறுவன தலைவர்
தீபம் அறக்கட்டளை
தர்மச்சாலை வீதி
தண்டீஸ்வரம் கோவில் அருகில்
வேளச்சேரி சென்னை
9444073635 / 43358232

Leave A Comment