தீபம் தொடர் சமுதாய பணிகள்

தீபம் தொடர் சமுதாய பணிகள்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
3.8.24:  மாத பூசத்தை முன்னிட்டு வடலூர் சத்திய தர்மச்சாலையில் தீபத்தின் திருத்தொண்டர்கள் நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்தனர்.

சென்னை வேளச்சேரி நித்திய தீப தர்மச்சாலையில் மாத பூசத்தை முன்னிட்டு, திரை நீக்கிய ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. சொற்பொழிவாளர்: ஜமீன் பல்லாவரம் திரு A மகாதேவன் அவர்கள்.

தர்மச்சாலையில் தினசரி மூன்று வேளையும் மக்கள் பசி போக்கும் பணி நடைபெறுகிறது.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி டாட்டா ஏஸ் வாகனத்தில் இரண்டு வேளை உணவு வழங்கப்படுகிறது.

4.8.24: இன்று சாலையோர ஆதரவற்ற மக்களுக்கு டாட்டா ஏஸ் வாகனத்தில் நேரில் சென்று உணவு வழங்கப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாதாந்திர இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஜோதியருள் அறக்கட்டளை மற்றும் தீபம் அறக்கட்டளை இணைந்து 53 மாணவ மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி வழங்கப்படுகிறது.

ஓரிரு காட்சிகளை தங்களின் தெய்வீக பார்வைக்காக இணைத்துள்ளோம்.

தொடர்ந்து நன்கொடைகள் வழங்கி நல்லாதரவு தரும் நல்லுள்ளங்களின் திருப்பாதங்களை வணங்கி போற்றி மகிழ்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்களுடன்…
தீபம் அறக்கட்டளை வேளச்சேரி, சென்னை
9444073635

Leave A Comment