6.6.25: 80 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி.

  • Home
  • Helps to Blinds
  • 6.6.25: 80 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி.

6.6.25: 80 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி.
🔥🌟🔥🌟🔥🌟🔥🌟🔥🌟🔥
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் 80 மாற்றுத்திறனாளி மற்றும் பார்வையற்ற குடும்பங்களுக்கு 10 கிலோ தரமான அரிசியும், 15 வகையான மளிகை பொருட்களும் தொடர்ந்து 15 வருடங்களாக வழங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த சமுதாய பணியில் மாதந்தோறும் பேருதவி புரியும், குறிப்பாக 25 குடும்பங்களுக்கு உபயம் செய்யும் சைதாப்பேட்டை திரு சம்பத்குமார் ஐயா அவர்களையும், பத்து குடும்பங்களுக்கு உதவி புரியும் பள்ளிக்கரணை அரிமா திருமதி ரஜினி மணவாளன் அம்மையார் அவர்களையும், மாதந்தோறும் 10 மாற்று திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் திருமதி உமாதேவி ஸ்ரீபதி அம்மையார் அவர்களையும், மற்றும் 6 நன்கொடையாளர்களையும் மனம் மொழி மெய்யால் வாழ்த்துகின்றோம். பாராட்டுகின்றோம். நன்றியை பதிவு செய்கின்றோம்.

எல்லாம் வல்ல இறைவன் தங்களின் தொடர் தருமத்திற்கு எல்லா நன்மைகளும் செய்வாராக.

வாழ்வாதார உதவி வழங்கும் குடும்பங்களின் பொருளாதார நிலையை நேர்காணலில் உறுதி செய்தப்பட்டுள்ளது.

உதவி வழங்குபவர்களுக்கும் உதவி பெறுபவர்களுக்கும் இன்று தர்மச்சாலையில் பிரார்த்தனை செய்யப்பட்டது.

அனைவருக்கும் வாழையலையில் வயிறார உணவு வழங்கப்பட்டது.

வெளியூரில் இருந்து வந்த குடும்பங்களுக்கு ரயில் மற்றும் பஸ் கட்டணங்கள் வழங்கப்பட்டன.

சட்டப்படியான அனைத்து டாக்குமெண்ட்களும் including acknowledgement பெறப்பட்டன.

மேலும் 20 குடும்பங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அடுத்த மாதம் முதல் 100 குடும்பங்களுக்கு உதவி வழங்க திட்டமிட்டுள்ளோம். விரும்பி வழங்கும் நன்கொடைகளை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம். ஒரு குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி: ₹1400 or ₹1500/-.

சிறு குறு காணொளியை இணைத்துள்ளோம். கண்டு மகிழுங்கள்.
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
நன்றியுடன்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
Gpay 9444073635

Leave A Comment