26.07.2024 – பசி தீர்ப்பது பரம புண்ணியம்

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • 26.07.2024 – பசி தீர்ப்பது பரம புண்ணியம்

பசி தீர்ப்பது பரம புண்ணியம்
🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚
“மக்கள் தொண்டு மகேசன் தொண்டு” என்று சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை கடந்த 27 ஆண்டுகளாக தொடர் மக்கள் சேவை செய்து வருகிறது.

குறிப்பாக திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் வகுத்த சன்மார்க்க பாதையில் ஈர நெஞ்சம் கொண்ட தயவாளர்களின் பேரருள் பெருங்கருணையினால் தினசரி 2000 மக்கள் பசிப்போக்கும் பணியை பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து செய்து வருகிறது.

குறிப்பாக நமது நித்திய தீப தர்மச்சாலையில் மூன்று வேளையும் வாழை இலையில் உணவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இரண்டு வேளை உணவும், மெய்யூர் கிராமத்தில் பழங்குடியின ஏழை குழந்தைகளுக்கு தினசரி இரண்டு வேளை உணவும், சென்னை சாலைகளில் ஆதரவற்ற மக்களுக்கு தேடிச்சென்று டாட்டா ஏஸ் வாகனத்தில் உணவும், ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்களுக்கு தேடிச்சென்று 15 கிராமங்களில் தினசரி ஆயிரம் பேருக்கும் உணவு வழங்கி வருகிறது.
ஓரிரு காட்சிகளை தங்களின் தெய்வீக பார்வைக்காக இணைத்துள்ளோம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தினசரி நடைபெறும் அன்னதான திருப்பணிக்கு தொடர்ந்து மாதாந்திர நன்கொடைகள் வழங்கி நல்லா தரவு தரும் 147 நல்லுள்ளங்களை, தயவாளர்களை, அருளாளர்களை, போற்றி பாராட்டி மகிழ்ந்து வாழ்த்துகிறோம்.

தினசரி அன்னதான திருப்பணிக்கு விரும்பி வழங்கும் நன்கொடைகளை வரவேற்கிறோம். மாதாந்திர தொடர் நன்கொடையாளர்களை வரவேற்கிறோம். பகுதிநேர முழுநேர அன்னதான திருத்தொண்டு செய்ய விரும்பும் திருத்தொண்டர்களை அன்போடு வரவேற்கிறோம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வாழ்க வாழ்க வள்ளல் மலரடி வாழ்க!
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
தர்மம் செய்வோம்!
தயவுடன் வாழ்வோம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தயவுடன் என்றென்றும் சமுதாய சிறு பணியில்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
Gpay: 9444073635

Leave A Comment