16.2.25 முதல் மேலும் ஒரு புதிய கிராம தர்மச்சாலை…
🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾🍚🌾
திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் சன்மார்க்க பாதையில் மக்கள் பசிப்போக்கும் பணியை பிரதானமாகக் கொண்டு, சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தினசரி நித்திய தீப தர்மச்சாலையில் மூன்று வேளையும் தொடர் அன்னதான திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, தேவதானம் பேட்டை கிராமம் ஜோதி மாமலையில், செஞ்சி மருத்துவமனையிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் புதிய டாட்டா ஏஸ் வாகனம் மூலம் தேடிச் சென்று உணவு வழங்க, மலை அடிவாரத்தில் புதிய தர்மசாலை 16.2.25 ஞாயிற்றுக்கிழமை துவங்க திருவருள் அருள் பாலித்திருக்கிறது.
புதிய கிராம தர்மச்சாலைக்கு உணவு தயார் செய்ய அடுப்புகள் உட்பட அனைத்து புதிய பாத்திரங்களும் பாரி முனையில் மொத்த கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளோம். புதிய பாத்திரங்களின் தோராய திட்ட மதிப்பீடு ₹80k முதல் ₹90k. பகுதியாகவோ முழுமையாகவோ விரும்பி வழங்கும் நல் உள்ளங்களின் உபயத்தை இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.
🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏
தயவுடன்…
என்றென்றும் சமுதாய சிறு பணியில்… 28 ஆண்டுகளாக…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635