பசியாற்றிவித்தலே பரம புண்ணியம்

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • பசியாற்றிவித்தலே பரம புண்ணியம்

“ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு”
“பசியாற்றிவித்தலே பரம புண்ணியம்”
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
குருவருளாலும், திருவருளாலும், நல்லுள்ளங்களின் தொடர் நன்கொடைகளாலும், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தர்ம சாலையில், தினசரி மூன்று வேளையும் வாழை இலையில் தொடர் மக்கள் பசி போக்கும் அறப்பணியும் மற்றும் பல்வேறு கிராம தர்ம சாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு மேல் பசியாற்றுவித்தல் தொடர்ந்து ஆண்டு முழுவதும், எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
மேலும் செஞ்சி தேவதானம் பேட்டை கிராமம் ஜோதி மாமலையில் கிராம சேவை சன்மார்க்க பண்ணை, கிணறு அமைத்தல் மற்றும் கட்டிடம் அமைக்க திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

முற்றிலும், சேவை நோக்கத்துடன் மக்களின் பணியே மகேசன் பணி என்ற தெய்வீக சிந்தனையில், அர்ப்பணிப்போடு, மனிதநேயத்தோடு, ஆன்மநேயத்தோடு, ஜீவகாருண்ய சிந்தனையோடு செயல்படும் அனைத்து தீபத்தின் உண்மை திருத் தொண்டர்களையும் வணங்கி மகிழ்கிறோம். அவர்களின் திருத்தொண்டை பாராட்டுகிறோம். தொண்டர்தம் திருப்பாதம் பணிகின்றோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதோ தினசரி அன்னதானம் நடைபெறும் ஓரிரு கிராம தர்ம சாலைகளின் படங்களை தங்களின் தெய்வீக பார்வைக்காக இணைத்துள்ளோம்.
கண்டு மகிழுங்கள். தங்கள் குழுக்களில் பகிர்ந்து தர்மத்தை பரப்புங்கள்.
🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚
“அன்னதானமே மகாதானம்”; “அன்னதானமே பிரதானம்”; “அன்னமே பரப்பிரம்மம்”; “ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு”; “பசி ஆற்றுவித்தல் பரம புண்ணியம்” என்ற சமுதாயப் பணியில், தீபம் அறக்கட்டளையின் அனைத்து அறப்பணிகளுக்கும், தொடர் நன்கொடைகள் வழங்கி மனித வடிவில் அற்புதங்கள் செய்து கொண்டிருக்கும் எங்கள் உயிரினும் மேலான தீபத்தின் அருளாளர்களை, 147 தொடர் மாதாந்திர நிரந்தர நன்கொடையாளர்களை, மனித தெய்வங்களை வணங்குகிறோம். வாழ்த்துகிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தகைசால் தயவுடன் கூடிய மனித தெய்வங்கள், இனிவரும் காலங்களில் தீபம் செய்து வருகின்ற தொடர் சமுதாயப் பணிகளில், தொய்வு விழாமல் தாங்க நினைப்பவர்கள், உதவி செய்ய விரும்புபவர்கள், தொடர் நன்கொடை வழங்க நாட்டம் உள்ளவர்கள், உதவி கரம் நீட்ட நினைப்பவர்கள், தருமம் செய்ய எண்ணம் உள்ளவர்கள், ₹2 கோடி செலவில் உருவாக உள்ள ஜோதிமா மலை பணிகளுக்கான வழிகாட்டுதல், வாழ்த்துக்கள், பொருள் உதவி, நிதி உதவி வழங்க விரும்பும் ஈர நெஞ்சினர், சமுதாய அக்கரை கொண்ட சிந்தனையாளர்கள், தீபம் அறக்கட்டளையை தொடர்பு கொண்டு புண்ணியத்தை, ஆண்டவனின் ஆன்ம லாபத்தை, பாகம் செய்து கொள்ளலாம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தர்மம் செய்வோம் !
தயவுடன் வாழ்வோம் !
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
தயவுடன்…
என்றென்றும் ஆன்மநேய அறப்பணியில்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
Gpay 9444073635
– அரசு பதிவு பெற்ற, 80G வரிவிலக்களிக்கப்பட்ட, CSR பதிவுபெற்ற, தமிழ்நாடு அரசின் முதல்வர் மற்றும் ஆளுநர் திருக்கரங்களால் நேரில் விருது பெற்ற ஓர் அற தொண்டு நிறுவனம்.

Leave A Comment