தீபம் அறக்கட்டளையின் ஞான சபையில் ஏழாம் மாதம்
தீப ஒளி “திருவிளக்கு” பூசை வழிபாடு.*
நாள் : 13.06.2025 வெள்ளிக்கிழமை
ரிப்போர்ட்டிங் டைம்: 6.15 pm
பூசை ஆரம்பம்: 6.30 pm
பூசை நிறைவு: 7.00 pm
இடம்: ஞான சபை, நித்திய தீப தர்மச்சாலை, வேளச்சேரி சென்னை.
நோக்கம்:
திரு அருட்பிரகாச ராமலிங்க அடிகளார் அருளிய சோதி வழிபாடு.
பயன்கள்:
திருவிளக்கு பூசையில் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு குடும்ப நலன் வேண்டியும், அன்றாட வாழ்வில் ஏற்படும் கவலைகள், தொல்லைகள், நீங்கி எங்கும் எதிலும் இனிமையை, அமைதியை, நிறைவை, நிம்மதியை, மகிழ்வை, அன்பை, அருளை, அனுபவப் பொருளாக பெற்று மனித வாழ்வை புனித வாழ்வாக மாற்ற திருவிளக்கு பூசை செய்வோம் வாருங்கள் .
தேவையான பூசை பொருட்கள்
1. ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஒன்று.
2. விளக்கு வைக்க இலை அல்லது ஒரு தட்டு.
3. மஞ்சள் கலந்த அரிசி சிறிதளவு
4. வாசனை உள்ள பூக்கள் இரண்டு முழம்.
5. குங்குமம், மஞ்சள், விபூதி, சிறிது அளவு
6. செக்கில் ஆட்டிய எண்ணெய். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், வேப்பெண்ணெய், (அல்லது) இதில் ஏதாவது ஒன்று.
பூசையில் கூறப்படும் மந்திரங்கள்.
1. மகா மந்திரம் 18 முறை (அருட்பா துதி)
2. வருகை பாடல்.
3. பரசிவ வணக்கம்
4. நித்திய விளக்கு
5. சுத்த சன்மார்க்க வேண்டுகோள்.
6. மெய்ப்பொருள் வியப்பு.
7. சோதி பாடல்.
8. சத்திய சிறு விண்ணப்பம்.
9. எளிய இரவு உணவு.
10. அனைவரும் வருக இறையருள் பெறுக!
தீபம் அறக்கட்டளை