ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

  • Home
  • VADALUR POOSAM SERVICE
  • ஏழை மாணவ, மாணவியர்களுக்கு தீபம் அறக்கட்டளையின் 16ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை!

‘‘வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன்
ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”
 என்று பாடினார் வள்ளலார்.
 

அவரின் திருத்தொண்டினை அடிப்படையாகக் கொண்டு சென்னை வேளச்சேரியில் இயங்கி வருகிறது தீபம் அறக்கட்டளை.

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 28 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப் பணியாக, சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் வசதியின்மையால் குடும்ப ஏழ்மை நிலையில் உள்ள பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் மேற்படிப்பை தொடர கடந்த 16 ஆண்டுகளாக தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

 
YearNo of StudentsAmounts
2010-1180₹ 3,75,000
2011-1297₹ 5,67,365
2012-13115₹ 61,800
2013-1485₹ 5,11,680
2014-1573₹ 4,50,000
2015-1687₹ 3,54,920
2016-17127₹ 6,25,811
2017-18112₹ 6,44,172
2018-19104₹ 6,67,470
2019-20115₹ 5,72,767
2020-2160₹ 3,60,041
2021-2253₹ 3,57,939
2022-2389₹ 8,79,490
2023-2472₹ 4,53,950
2024-2583₹ 6,22,360
Total1352₹ 80,60,965

இதுவரை 1352 மாணவச் செல்வங்களுக்கு (degree diploma engineering doctorate)  மொத்தம் ₹80,60,965/ ரூபாய் இலவச கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சமுதாய அக்கறையோடு ஏழை மாணவர்களின் கல்விக்கு கடந்த 16 ஆண்டுகளில் ₹80 லட்சங்கள் அள்ளிக் கொடுத்து உதவிய அருளாளர்களை, நன்கொடையாளர்களை, வாழும் தெய்வங்களை, தீபம் அறக்கட்டளை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது.

கடந்த வருட கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வின் காணொளிப்பதிவு:
https://youtu.be/lmZt4MJuM5Y

இந்த வருடம்  கல்வி உதவித்தொகைக்கு நன்கொடைகள் வரவேற்க்கப்படுகின்றன, கடந்த வருடம் மிகக் குறைவாகவே நன்கொடைகள் வந்தது. ஓர் ஏழை மாணவர் உயர்கல்வி பயில நிதி உதவி செய்து, அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
⚡ஒரு மாணவனுக்கு உதவினால், ஒரு குடும்பம் வாழும்.
⚡ஒரு குடும்பம் வாழ்ந்தால், ஓர் ஊர் வாழும்.
⚡ஓர் ஊர் வாழ்ந்தால், ஓர் நாடு வாழும்.
⚡ஓர் நாடு வாழ்ந்தால், வளர்ந்தால், உலகம் சமநிலை பெற்று, ஒரே குடும்பமாக மனித சமுதாயம் வாழ்வாங்கு வாழும்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥
 
கடந்த வருட கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு:
https://photos.app.goo.gl/VZ8XRSLTLA9PnJbMA
 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

For Donation thro Bank Transfer:

DEEPAM TRUST
Current A/C No.30265475129
State Bank of India
IIT Madras
IFS:SBIN0001055
Gpay – 9444073635
UPI ID – deepamtrust@sbi
UPI ID – 9444073635@okbizaxis

https://deepamtrust.org/donate-now/

Please note that PAN is mandatory for claiming under Section 80G of the IT Act.
 
வங்கி மூலம் பண பரிமாற்றம் செய்தவர்கள் கீழே உள்ள இணைப்பில் சென்று படிவத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும்.
தேவையான விவரங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே எங்களால் உங்களுடைய முகவரிக்கு இரசீது அனுப்ப இயலும்.
 
💐💐💐💐💐💐💐💐💐💐💐
தயவுடன்…
என்றென்றும் சமுதாய சிறு பணியில்… 28 ஆண்டுகளாக…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி, சென்னை
9444073635
– This Body is to Serve Others

Leave A Comment